shadow

புரோட்டா மாவில் ஆண்மை இழக்கச்செய்யும் மருந்து: வெடித்தது கலவரம்

இலங்கையில் திடீரென பொதுமக்களிடையே வன்முறை ஏற்பட்டிருப்பதை அடுத்து 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இலங்கையில் உள்ள ஒரு புரோட்டா கடையில் ஆண்மை இழக்கச்செய்யும் மருந்து புரோட்டா மாவுடன் கலக்கப்படுவதாக கண்டி பகுதியில் நேற்று இரவு ஒரு கடைக்கு தீ வைக்கப்பட்டது. ஏற்கனவே இஸ்லாமியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இது இன்று காலை கலவரமாக வெடித்தது.

இந்நிலையில், கண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கலவரம் வெடித்ததை தொடர்ந்து தற்போது அங்கு அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply