shadow

பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரி டெல்லியில் கைது செய்யப்பட்டார். இவரை ராஜஸ்தான் போலீஸ் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாரா கடனுக்காக கையகப்படுத்திய ஓட்டல் ஒன்றின் சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்று மோசடி செய்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது

இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ராஜஸ்தான் போலீசார் பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் கைது செய்துள்ளனர்.

எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரி கைது என்ற தகவல் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது