எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு தேவையில்லை: மு.க.ஸ்டாலின்
சமீபத்தில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. போக்குவரத்து ஊழியர்கள் ஒருபக்கம் போராட்டம் நடத்தி கொண்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் எம்.எல்.ஏக்களுக்கு சம்பளத்தை உயர்த்தியது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என கையெழுத்து போட்டு கொடுத்துள்ளோம் என்றும் எங்களின் சம்பள உயர்வை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குகிறோம் என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய பிரச்சனை தீரும்வரை மட்டுமே சம்பள உயர்வு தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கு பதிலாக இந்த சம்பள உயர்வை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பகிர்ந்து கொடுத்திருக்கலாமே என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.