shadow

காவிரி மீட்பு பயணத்தை தொடங்கினார் ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த சில நாட்களாக திமுகவினர் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று காவிரி உரிமை மீட்பு பயணம் திருச்சி முக்கொம்பில் தொடங்கியது. மேலும் இரண்டாவது கட மீட்பு பயணம் வரும் 9-ந் தேதி அரியலூரில் இருந்து தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய காவிரி உரிமை மீட்பு பயணத்திம் தொடக்கவிழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நடைபயணத்தில் மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த பயணம் ஜீயபுரம், கம்பரசம்பேட்டை, கலைஞர்அறிவாலயம், சிந்தாமணி அண்ணாசிலை, இந்திராகாந்தி மகளிர் கல்லூரி, மெயின் கார்டுகேட், காந்திமார்க்கெட், தஞ்சை ரோடு வழியாக பால்பண்ணை பைபாஸ்ரோட்டில் இருந்து சர்க்கார்பாளையம், முல்லைக்கொடி, வேங்கூர் வழியாக கல்லணை சென்றடைகின்றனர். இத்துடன் இன்றைய பயணம் நிறைவடைகிறது.

Leave a Reply