அதிகாரிகள் திணறல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் மது பாட்டில்களுடன் வந்த லாரி ஒன்றை பொதுமக்கள் வழி மறித்து போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஒரு பக்கம் மது பிரியர்களுக்கு சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராமசாமியாபுரம் என்ற பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில்களுடன் கூடிய லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை பொதுமக்கள் வழி மறித்து போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

பொதுமக்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து வேறு வழியின்றி டாஸ்மார்க் லாரி திரும்பிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது

Leave a Reply