shadow

காலவரம்பற்ற உண்ணாவிரதத்தை ஒரே நாளில் நிறுத்திய ஜீயர்

ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலவரம்பற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இன்று திடீரென வாபஸ் பெற்றார். ஹெச்.ராஜா, எஸ்.வி சேகர் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை அடுத்து அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம் இருந்த ஜீயரை இன்று எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று நேரில் சந்தித்து, உடலை வருத்தி இருக்கும் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரிக்கை வைத்தனர்.

ஜீயரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, “ஆண்டாள் மட்டுமின்றி திருவள்ளுவர், உவேசா, வள்ளலார் உள்ளிட்ட தமிழ் ஆளுமைகளை தனது கட்டுரைகள் மூலமாக கொச்சைப்படுத்தியவர் வைரமுத்து” என்று விமர்சித்தார்.

Leave a Reply