இலங்கையில் சன்டே டைம்ஸ் பத்திரிகையில் பணிபுரிந்து வரும் ஒரு பெண் பத்திரிகையாளர் நேற்று அவரது வீட்டில் மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு மரணம் அடைந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மெல் குணசேகரா என்ற 40 வயது பெண் பத்திரிகையாளர், இலங்கையில் உள்ள சன்டே டைம்ஸ் பத்திரிகையில் சில வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மெல் குணசேகரா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் அருகில் உள்ள சர்ச்சுக்கு சென்றிருந்தனர்.

சர்ச்சில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது, மெல் குணசேகரா, கத்தியால் குத்தப்பட்டு ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது முக, கை, கால்களில் ரத்தக்காயங்கள் இருந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் உடனடியாக மெல் குணசேகராவின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டப்பகலில் ஒரு பெண் பத்திரிகையாளர் கொலை செய்யப்ப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply