shadow

இத்தாலி நாட்டு தேர்தலில் இலங்கை தமிழர்கள்..!!

இத்தாலி நாட்டில் நடைபெறும் வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் இலங்கை தமிழர்கள் இரண்டு பேர் களமிறங்கியுள்ளனர். அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலியை சேர்ந்த பலெர்மோ நகரில் இன்று வெளிநாட்டவர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 17 நாடுகளை சேர்ந்த 26 வெளிநாட்டினர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் குறிப்பிட்ட இந்த தொகுதியில் இலங்கை சார்பாக தியாகராஜா ரமணி மற்றும் அருள்நேசன் தயாராஜ் ஆகிய இரண்டு இலங்கை தமிழர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கையை பிரதிநிதத்துவப்படுத்தி போட்டியிடும் இந்த இளம் தலைமுறையினர் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

Leave a Reply