shadow

12உலகக்கோப்பை 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி தற்போது க்ளைமாக்ஸை நோக்கி நெருங்கிக்கொண்டுள்ளது. இன்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதியது. போட்டியின் நடுவில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. திரெமனே 44 ரன்களும், மாத்யூஸ் 40 ரன்களும், தில்ஷன் 39 ரன்களும் எடுத்தனர். அதன்பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 13.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் D/L முறையில் இலங்கை 27 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாத்யூஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a Reply