shadow

முதல் டி20 போட்டி: இந்தியா அதிர்ச்சி தோல்வி

இந்தியா, இலங்கை, மற்றும் வங்கதேசம் ஆகிய 3 நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் போட்டியின் முதல் ஆட்டம் நேற்று இலங்கையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டையும் இரண்டாவது ஓவரில் சுரேஷ் ரெய்னாவின் விக்கெட்டையும் இழந்தது. இருப்பினும் தவான் அதிரடியாக விளையாடி 90 ரன்கள் எடுத்ததால் இந்திய அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்திருந்தது

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. பெராரேவின் அதிரடியால் அந்த அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த இந்திய அணி இந்த போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.

Leave a Reply