முதல் டி-20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் டி-20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தற்போது தனது சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
நேற்று புனே நகரில் தொடங்கிய இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். ஒரு கட்டத்தில் 11 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 58 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது.
102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து 18 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய இலங்கை அணியின் ரஜிதா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கான 2வது டி-20 போட்டி வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.