இலங்கையில் விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் கட்சிக்கு தமிழ் கட்சி ஒன்று ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இன்று காலை இலங்கை அதிபர் ராஜபக்சேவை கொழும்புவில் நேரில் சந்தித்தார். அப்போது அவருடைய கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததாக ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர் இன்று கூறியுள்ளார்.
ஆறுமுகம் தொண்டைமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடனும் இதற்கு முன்னர் கூட்டணியில் இருந்தது. ஆனால் திடீரென அந்த கூட்டணியில் இருந்து விலகி தற்போது ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு ஆதரவு அளித்திருப்பது இலங்கை தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுடன் ஒரு தமிழ் கட்சி கூட்டணி வைப்பதா? என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி நவம்பர் மாதம் முறைப்படி அறிவிக்கப்படும்.
Leave a Reply
You must be logged in to post a comment.