shadow

நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த இலங்கை கடற்படையின் கப்பல் மீனவர்களின் படகு மீது பயங்கராமாக மோதியதாக தகவல்

இந்த மோதலில் மீனவர்களின் விசைப்படகு சேதம்டைந்து கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அந்த விசைப் படகில் சென்ற 5 மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.