நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட். தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது இலங்கை
நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் நியூசிலாந்தும் ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 75 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் இந்த போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இந்த தொடரை இலங்கை அணி வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி ஜனவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை வெற்றி பெற்றல் தொடரை சமன்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
Chennai Today News: Srilanka lose the chance to win Newzeland series
Leave a Reply
You must be logged in to post a comment.