shadow

Fishermen_B_24052013எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர்களை விடுவிக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட இந்த 11 மீனவர்களும் இன்று அல்லது நாளை நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அவ்வப்போது கைது செய்தபோதிலும், உடனுக்குடன் தமிழக முதல்வரின் கடிதத்திற்கு மதிப்பு கொடுத்து மோடி அரசு இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதன் காரணமாக இலங்கை அரசும் அவ்வப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்து வருகிறது.

இந்நிலையில் இலங்கை சிறையில் ஏற்கனவே அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரின் காவலை, வரும் 4-ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களையும் விடுவிக்க இந்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Leave a Reply