shadow

rajapakseஇலங்கை அதிபர் தேர்தலில் 3வது முறையாக ராஜபக்சே போட்டியிட அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்அனுமதி கொடுத்துள்ளது.

இலங்கையில் அதிபர் பதவியை ஒருவர் இரண்டு முறை மட்டுமே பொறுப்பில் இருக்க முடியும். ஆனால் இந்த நிபந்தனையை இலங்கை அரசு சமீபத்தில் 18வது சட்டத் திருத்தம் மூலம் நீக்கியிருந்தது. இதனால் சமீபத்தில் ராஜபக்சே இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் தான் மீண்டும் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட வழி உள்ளதா? எனக் கேட்டு  மனுத்தாக்கல் செய்திருந்தார். இவர் ஏற்கனவே தற்போது இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்த மனு நேற்று இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, ”இலங்கை அதிபர் தேர்தலில் 3வது முறையாக ராஜபக்சே போட்டியிடலாம்” என அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Leave a Reply