shadow

இலங்கை அதிபரின் மரண தேதியை கணித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஜோதிடர் கைது

இலங்கை அதிபர் சிறிசேனா மரணம் அடையும் தேதியை கணித்த பிரபல ஜோதிடர் ஒருவர் அதிரடியாக அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் அதிபராக உள்ள சிறிசேனா 2017ஆம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதிக்குள் மரணம் அடைந்து விடுவார் என்று இலங்கையின் பிரபல ஜோதிடர் விஜிதா ரோகணா விஜேமுனி என்பவர் கணித்திருந்தார். கணித்தது மட்டுமின்றி இந்த தகவலை அவர் வீடியோவாக பேசி அதை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.

இதுகுறித்து இலங்கை ஊடகம் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சக செயலாளர் நிமல் போபகே செய்த புகாரின் அடிப்படையில் நேற்று ஜோதிடர் விஜேமுனியை குற்ற புலனாய்வு போலீசார் கைது செய்தனர். மக்களிடம் குழப்பத்தை விளைவிக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதே விஜேமுனிதான் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை சென்றிருந்தபோது அவரை துப்பாக்கியால் அடிக்க முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள இவர் மீண்டும் இலங்கை அதிபரின் மரண தேதியை பொய்யாக கணித்து கைது செய்யப்பட்டுள்ளார். 

Leave a Reply