பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘நான் கடவுள்’ படத்தில் ஆர்யா, ஒரு அகோரி கேரக்டரில் மிரட்டலான நடிப்பை தந்திருப்பார். அதற்கு பின்னர் மீண்டும் ஒருநடிகர் அதே அகோரி வேடத்தில் நடிக்கவுள்ளார். அவர்தான் இதுவரை மென்மையான கேரக்டரில் இதுவரை நடித்து வந்த நடிகர் ஸ்ரீகாந்த்.
ரோஜாக்கூட்டம் படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் அதன்பின்னர் பல படங்களில் மென்மையான காதலர் வேடத்தில் நடித்த ஸ்ரீகாந்த், தற்போது சவுகார் பேட்டை என்ற படத்தில் அகோரியாக நடிக்கின்றாராம். இந்த கேரக்டருக்காக நிஜமான அகோரிகளை நேரில் பார்த்து அவர்களுடைய மேனரிசங்களை கவனித்து வருகின்றாராம். அதுமட்டுமின்றி படத்தின் இயக்குனர் வடிவுடையானும் அகோரி குறித்து நிறைய டிப்ஸ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சவுகார்பேட்டை’ படத்தில் அகோரியாகவும், சாதாரண இளைஞனாகவும் இரு வேடங்களில் ஸ்ரீகாந்த் நடித்து வருகிரார். இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் ராய்லட்சுமி நடிக்கின்றார். மேலும் விவேக், சுமன், சரவணன், சிங்கம்புலி, பவர்ஸ்டார் சீனிவாசன், கோவை சரளா, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.