கொரோனா வைரஸால் வெளியேற்றப்பட்ட ஊழியர்கள் ஸ்ரீ ஹரிகோட்டாவில் பரபரப்பு

சீனா உள்பட உலகம் முழுவதும் 125 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தாக்கி பலியாகி உள்ளனர் என்பதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் சுமார் 80 நபர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி கல்லூரி தியேட்டர்கள் ஆகியவை மூட உத்தரவிடப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் காரணமாக சில முன்னணி அலுவலர்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தி உள்ளனர்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்ரீஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு ஏப்ரல் 1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply