ராஜமெளலியால் எனக்கு வருத்தம்; ஸ்ரீதேவி
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி’ மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் ராஜமாதா கேரக்டரில் நடிக்க ஸ்ரீதேவி அதிக தொகை கேட்டதால், அந்த வாய்ப்பு ரம்யாகிருஷ்ணனுக்கு சென்றதாக பேட்டி ஒன்றில் ராஜமெளலி கூறியிருந்தார். இந்த கருத்துக்கு ஸ்ரீதேவி தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
‘பாகுபலி’ படத்தின் ராஜமாதா சிவகாமி கேரக்டரில் நடிக்க நான் ரூ.6 கோடி சம்பளம் கேட்டதாகவும், மேலும் பல சலுகைகள் கேட்டதாகவும் இயக்குனர் ராஜமெளலி பேட்டி ஒன்றில் கூறியது என் மனதை புண்படுத்தியுள்ளது.
50 வருடங்களில் 300 படங்களில் நடித்துள்ளேன். நான் எத்தனையோ படங்களில் நடிக்க மறுத்ததுண்டு. ஆனால் ‘பாகுபலி’ படத்தில் நடிக்க மறுத்ததை மட்டும் ஊடகங்கள் பெரிதாக்குகின்றன. என் கணவர் ஒரு தயாரிப்பாளர் என்பதால் ஒரு தயாரிப்பாளருக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது எனக்கு தெரியும். எனவே ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி நான் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. அவ்வாறு நிபந்தனைகள் விதித்திருந்தால் என்னை எப்போதோ திரையுலகில் இருந்து வெளியேற்றி இருப்பார்கள்
ராஜமெளலி ஒரு மதிக்கத்தக்க இயக்குனர். அவர் இயக்கிய ‘நான் ஈ’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருவேளை அவரிடம் தயாரிப்பாளர் தரப்பு தவறான தகவலை கூறியிருக்கலாம் அல்லது தகவல் பரிமாற்றத்தில் தவறு நடந்திருக்கலாம். ஆனால் இதைப்பற்றி பொதுவெளியில் பேசியதை இயக்குனர் ராஜமெளலி தவிர்த்திருக்கலாம் என்பதே எனது வருத்தம்’
இவ்வாறு இயக்குனர் ராஜமெளலி கூறியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.