ஸ்ரீதேவி மரணத்திற்கு தாவூத் இப்ராஹிம் காரணமா? ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சந்தேகம்
ஸ்ரீதேவி மரணத்திற்கு யார் காரணம் என்று தன்னால் உறுதியாக சொல்ல முடியாது என்றாலும், தாவூத் இப்ராஹிம் மீதான சந்தேகத்தை தான் நிராகரிக்கவில்லை என்று டெல்லி காவல்துறையின் உதவி ஆணையராகப் பணியாற்றிய வேத் பூஷண் என்பவர் கூறியுள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வேத்பூஷன், நடிகை ஸ்ரீதேவி தண்ணீரில் மூழ்கி இறந்ததாக வெளிவந்த செய்தி உண்மையானது அல்ல எனக் குறிப்பிட்டார்.
5.7 அடி உயரம் கொண்டவர் ஸ்ரீதேவி என்றும், ஆனால், தண்ணீர் தொட்டியின் உயரம் 5.1 அடி மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக துபாய், மும்பை, டெல்லி, லக்னோ போன்ற இடங்களுக்குச் சென்று தனிப்பட்ட முறையில் தாம் விசாரணை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.