shadow

‘புலி’ தயாரிப்பாளர்கள் மீது திடுக்கிடும் புகார் தெரிவித்த ஸ்ரீதேவி
sridevi
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த ‘புலி’ திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்தால் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் பல கோடி நஷ்டம் என்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஸ்ரீதேவி, திடுக்கிடும் புகார் ஒன்றை தற்போது கூறியுள்ளார்.

இந்த படத்தில் நடிக்க ஸ்ரீதேவிக்கு பேசிய சம்பளத்தொகையில் ரூ.50 லட்சத்தை இன்னும் தயாரிப்பாளர்கள் தரவில்லை என்றும் இதுகுறித்து பலமுறை தயாரிப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு சரியான பதில் வரவில்லை என்றும் ஸ்ரீதேவி, மும்பை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்

மும்பை தயாரிப்பாளர் சங்கத்தினர் இதுகுறித்து தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ‘புலி’ தயாரிப்பாளர்களிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply