shadow

ஸ்ரீ மஹாலஷ்மி தேவியை தங்களுடைய இஷ்டத் தெய்வமாகக் கொண்டு உபாசித்து வருபவர்கள். அவளுக்குரிய சில பவித்திரமான மந்திரங்களை ஜபிப்பதன் மூலமாக – அவளுடைய அருளை, அவளை ஆராதிப்பவர்கள் அடையலாம். அத்துடன் சகல கார்யங்களிலும் சகல விதமான சித்திகளையும் அடையலாம்.

சித்தி பெறுவதற்குரிய மந்திர மார்க்கங்கள்:

1. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அடைவதற்கு:
கீழ் வரும் மந்திரத்தினைத் தினந்தோறும் காலையில் எழுந்து -இருபத்து ஏழு தடவை ஜபம் செய்யவும்.

” மஹா லக்ஷ்மீர் மஹாகாளீ மஹாகந்யா ஸரஸ்வதீ
போக வைபவ ஸந்தாத்ரீ பக்தானுக்ரஹ காரிணீ ”

2. எல்லாவிதப் பயங்களும் ஒழிய:
கீழ் வரும் மந்திரத்தைத் தினந்தோறும் மாலையில் பனிரெண்டு தடவை ஜபம் செய்யவும்.

” பத்ரகாளீ கராளீ ச மஹாகாளீ திலோத்தமா
காளீ கராள வக்த்ராந்தா காமாக்ஷீ காமதா ஸுபா ”

3. ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய எண்ணும் போது, அதில் வெற்றி கிட்ட:
கீழ் வரும் மந்திரத்தைத் தாங்கள் எந்தக் காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணினார்களோ –
அந்தக் காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் தினந்தோறும் பத்துத் தடவை ஜபம் செய்து வரவும்.

” ஜயா ச விஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா
குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ வீணா புஸ்தக தாரிணீ ”

4. எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட:
கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் எழுந்தவுடன் பதினெட்டுத் தடவை. தினந்தோறும் ஜபிக்கவும்.

” பிப்பலா ச விஸாலாக்ஷீ ரன்க்ஷக்க்நீ வ்ருஷ்டி காரிணீ
துஷ்ட வித்ராவிணீ தேவீ ஸர்வோபத்ரவ நாஸிநீ ”

5. கல்வியில் வல்லமை பெற:
கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் எழுந்தவுடன் பனிரெண்டு தடவை ஜபிக்கவும்.

” அர்த்த நாரீஸ்வரி தேவீ ஸர்வ வித்யா ப்ரதாயிநீ
பார்கவீ பூஜுஷீ வித்யா ஸர்வோபநிஷ தாஸ்திதா ”

6. எல்லா விதமான நோய்களும் நீங்க:
கீழ் வரும் மந்திரத்தைத் தினந்தோறும் காலையில் எட்டு முறை ஜலத்தில் ஜபிக்கவும். அந்த ஜலத்தை நோயாளியின் மேல் தெளிக்கவும். உள்ளுக்கும் அருந்தக் கொடுக்கவும்.

” ஸர்வ ப்ரமாணா ஸம்பத்தி : ஸர்வரோக ப்ரதிக்ரியா
ப்ரஹ்மாண்டாந்தர் பஹிர் வ்யாப்தா விஷ்ணு வக்ஷோ விபூஷணி ”

7. சீக்கிரத்தில் திருமணம் நடைபெற:
கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் பத்துத் தடவை ஜபிக்கவும்.

” புத்ர பௌத்ராபி வ்ருத்திஸ்ச வித்யா போக பலாதிகம்
ஆயுராரோக்ய ஸம்பத்தி : அஷ்டைஸ்வர்யம் த்வமேவ ஹி “

Leave a Reply