நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி. இலங்கை அபார வெற்றி
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணி பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கிய நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 276 ரன்கள் குவித்தது.
277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி,அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. தில்சான் 91 ரன்களும், திரமின்னே 87 ரன்களும், குணதிலக 65 ரன்களும் எடுத்தனர். இதனால் இலங்கை அணி 46.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் இருந்தாலும் அடுத்து வரும் இரண்டு போட்டிகள் முக்கியத்துவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.