shadow

CRICKET-WC-2015-SRI-BANஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியை புரட்டி எடுத்த இலங்கை 92 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 332 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தில்சன் 161 ரன்களும், சங்கரகரா 105 ரன்களும் குவித்தனர். திரமன்னே 52 ரன்கள் எடுத்தார்.

வெற்றி பெற 333 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய வங்க தேச அணி, முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது. வங்கதேச அணி 47 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்தது. தில்ஷன் ஆட்டநாயகான தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply