shadow

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட். இலங்கை அணி நிதான ஆட்டம்

cricketஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று ஆரம்பமான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 114 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 393 ரன்கள் எடுத்தது. ராகுல் 108 ரன்களும், ரோஹித் சர்மா 79 ரன்களும், விராத் கோஹ்லி 78 ரன்களும் விக்கெட் கீப்பர் சாஹா 56 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 53 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 140 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியுடன் ஓய்வு பெறப்போகும் சங்கரகரா 32 ரன்கள் எடுத்தார்.இன்னும் 253 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் இன்று இலங்கை அணி தனது ஆட்டத்தை தொடரவுள்ளது.

Leave a Reply