shadow

ltteவிடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அதிரடியாக  நீக்கம் செய்தது. இந்த தடை நீக்கத்தை  எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் என இலங்கை எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வந்தநிலையில் விடுதலைப்புலிகளூக்கு எதிரான தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என இலங்கை அரசு இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்த கேள்வி ஒன்றை இலங்கை நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல எழுப்பியபோது அதற்கு பதலளித்து பேசிய ஜி.எல்.பெரீஸ் இவ்வாறு பதில் அளித்தார்.

இதனிடையே, இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளார் என்று, இலங்கை நாடாளுமன்றத்தில் ஜி.எல்.பெரீஸ் அறிவித்தார். இதுதொடர்பாக, இந்திய உயரதிகாரிகள், ராஜபக்சேவுடன் ஆலோசித்ததாகவும் அவர் கூறினார்.

Leave a Reply