shadow

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி
விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே டிசம்பர் 1,2 ஆம் தேதிகளில் 2 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

1. முதல் ரயில் விழுப்புரத்தில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 12 மணிக்கு திருவண்ணாமலை சேரும். அதேபோல் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 3.15 மணிக்கு விழுப்புரம் வந்து சேரும்

2. இரண்டாவது ரயில் விழுப்புரத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேபோல் திருவண்ணாமலையில் இருந்து நள்ளிரவு 2.30 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 4 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்

இந்த சிறப்பு ரயில்களை கார்த்திகை தீபவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply