shadow

‘பாகுபலி’ வெற்றியால் தென்னிந்தியர்களும் முட்டாள்கள் ஆகிவிட்டனர்.  மார்க்கண்டே கட்ஜூ

ஜல்லிக்கட்டு போராட்டம், சசிகலா-ஓபிஎஸ் விவகாரம், ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரம் , விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றில் தமிழர்களுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்தவர் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ. தமிழகத்திற்கு கவர்னராகவும் பணிபுரிய தயார் என்றும் கூறியவர்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘பாகுபலி 2’ படத்தின் வெற்றி குறித்து கருத்து கூறிய மார்க்கண்டேய கட்ஜூ, ‘இதுவரை வட இந்தியர்கள் மட்டுமே முட்டாள்கள் என்று நினைத்து கொண்டிருந்தேன், தற்போது தென்னிந்தியர்களும் முட்டாள்கள் என்பதை ‘பாகுபலி’ படத்தை வெற்றி அடைய செய்து நிரூபித்துவிட்டதாக தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

பாகுபலி 2 திரைப்படம் ரிலீசாகி 3 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. டிக்கெட் விலையை திரையரங்குகள் உயர்த்தி விற்பனை செய்தும்கூட, தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது. சினிமா மோகத்தை அடிப்படையாக வைத்தே கட்ஜூ இவ்வாறு கூறியதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.

Leave a Reply