shadow

புவனேஷ்குமார் அதிரடியால் தென்னாபிரிக்கா திணறல்

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் இன்று முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது

இந்த நிலையில் முதன்முதலில் தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடும் வீரர்களை கொண்ட இந்திய அணி பந்துவீச்சில் அனல் தெறிக்கின்றது. குறிப்பாக புவனேஷ்குமார் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். சற்றுமுன் வரை தென்னாப்பிரிக்கா 14.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

இந்திய அணியின் புவனேஷ்குமார் 7 ஓவர்கள் பந்துவீசி இரண்டு மெய்டன், 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். போட்டியின் முதல் நாளிலேயே இந்திய அணி சிறப்பாக விளையாடுவதால் இந்தியாவின் வெற்றி தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply