சொந்த மண்ணில் இங்கிலாந்து பரிதாபம். 20 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்தது
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3வது ஆட்டம் நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
சொந்த மைதானத்தில் சுறுசுறுப்பாக களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. ஒருகட்டத்தில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு வெறும் 20 ரன்களே இங்கிலாந்து எடுத்திருந்தது. இந்த நிலையில் 31.1 ஓவர்களில் இங்கிலாந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
இதனால் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 28.5 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றபோதிலும் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.