உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 162 ரன்கள் எடுத்து மிக அபாரமாக ஆடினார்.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 408 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 162 ரன்களும், ஆம்லா 65 ரன்களும், டிபிளஸ்ஸிஸ் 62 ரன்களும், ரோஸ்ஸவ் 61 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 409 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி 33.1 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுமோசமான தோல்வியை அடைந்தது. டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகள் எடுத்துள்ள தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி புள்ளிகள் எதுவும் எடுக்காமல் கடைசி இடத்தில் உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.