உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றை ஆட்டத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 411 ரன்கள் எடுத்தது. ஆம்லா 159 ரன்களும், டிபிளஸ்ஸிஸ் 109 ரன்களும், ரோஸ்ஸவ் 61 ரன்களும் எடுத்தனர்.
வெற்றி பெற 412 ரன்கள் தேவை என்ற கடின இலக்கை நோக்கி பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 45 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அந்த அணியின் ஐந்து பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.
ஆம்லா ஆட்டநாயகான தேர்வு செய்யப்பட்டார். இன்று பாகிஸ்தான் அணியும் ஐக்கிய அரபு எமிரேட் அணியும் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.