மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு முதல் தோல்வி
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த நான்கு போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று வந்த இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ரன்கள் குவித்தது. லீ 92 ரன்களும் வான் நீகெர்க் 57 ரன்களும் அடித்தனர்
274 என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணி, தென்னாப்பிரிக்க வீராங்கனைகளில் பந்துவிச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆட்டமிழாந்தது. ஷர்மா மற்றும் கோஸ்வாமி ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு தாக்கு பிடித்து 60 மற்றும் 43 ரன்கள் முறையே எடுத்தனர். இந்த போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும் இந்தியா இன்னும் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.