shadow

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி. இலங்கை படுதோல்வி

இலங்கை கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி தொடர் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம் ஆனது. இந்த போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. மெண்டிஸ் 62 ரன்கள் எடுத்தார்.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றடு. ஆம்லா 57 ரன்களும், டூபிளஸ்சிஸ் 55 ரன்களும் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் போட்டி வரும் பிப்ரவரி 1ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெறவுள்ளது.

Leave a Reply