shadow

CRICKET-BAN-RSAவங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 3வது நாளான நேற்று தென்னாப்பிரிக்க அணி 17 ரன்கள் பின் தங்கி உள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 248 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதையடுத்து விளையாடிய வங்கதேச அணி 326 ரன்கள் எடுத்தது.

இதனால் 78 ரன்கள் பின் தங்கியிருந்த தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. ஆட்டநேர முடிவின்போது தென்னாப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்துள்ளது. வான் ஜில் 33 ரன்களிலும், எல்கார் 28 ரன்களிலும் ஆடி வருகின்றனர். இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இந்த போட்டியில் வங்கதேசம் வெல்லுமா? அல்லது டிரா ஆகுமா? என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply