shadow

ஜக்மோகன் டால்மியா பதவியை பிடித்தார் சவுரங் கங்குலி
sourav ganguly600
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக  நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளாஅர்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20ஆம் தேதி திடீரென மரணம் அடைந்ததை அடுத்து அவர் வகித்து வந்த இரு பதவிகளும் காலியாக இருந்தன. இந்நிலையில் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு தற்போது சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சவுரவ் கங்குலி இதுவரை மேற்கு வங்க கிரிக்கெட் சங்க இணைச்செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் சவுரவ் கங்குலி, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக நியமிக்கப்பட்டதை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதிப்படுத்தியுள்ளார். மேற்குவங்க கிரிக்கெட் சங்க தலைவராக பொறுப்பேற்ற சவுரங் கங்குலிக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply