காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஏற்கனவே கடந்த 2011ஆம் ஆண்டு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், மருத்துவ பரிசோதனைக்காக அவர் அடிக்கடி அமெரிக்கா சென்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று சோனியா காந்திக்கு திடீரென சுவாசக்குழாய் நோய்த்தொற்று ஏற்பட்டது. எனவே உடனே அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய்மக்கான் வெளியிட்ட ஒரு அறிக்கையில்”சோனியா காந்திக்கு சுவாசக் குழாய் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை இதுவரை எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை.
Leave a Reply
You must be logged in to post a comment.