shadow

ஷீனா போரா கொலை வழக்கு: என்னை கொல்ல சதி என இந்திராணி முகர்ஜி கதறல்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜி என்பவரின் மனைவியான இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் இந்திராணி முகர்ஜி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன் மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதிகளவு சக்தி கொண்ட வலி நிவாரண மருந்துகளை அவர் உட்கொண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சில நாட்கள் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், சி.பி.ஐ கோர்ட்டில் இன்று அவர் தனது வாதத்தினை பதிவு செய்துள்ளார்.

அதில், “சிறையில் என்னை கொல்வதற்காக யாரோ முயன்று வருகின்றனர். என்னுடைய வாழ்க்கையை நினைத்து பயமாக உள்ளது. சிறைத்துறை ஐ.ஜி.யிடம் நான் எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை. வழக்கு தொடர்பாக நான் யாரிடமும் பேச வில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply