பிரபல நடிகை சினேகா கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் சினேகா கர்ப்பமானதாக செய்திகள் வெளிவந்தன. இது அவருக்கு ஏழாவது மாதம் என்பதால் அவருடைய குடும்பத்தினர் வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று சினேகாவின் வளைகாப்பு சென்னையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் வளைகாப்பு நடைபெற்றது.
இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் சினேகாவின் தந்தை ராஜாராம், தாயார் பத்மாவதி, பிரசன்னாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாயார் புவனேஸ்வரி மற்றும் நெருங்கிய உறவினர்கள், கலந்துகொண்டார்கள். நடிகர்கள் சிபிராஜ், நரேன், நடிகைகள் மீனா, சங்கீதா, பாடகர் கிருஷ், டைரக்டர் ஹரியின் மனைவி பிரீதா ஹரி ஆகியோர் வளைகாப்புக்கு வந்து சினேகா-பிரசன்னா ஜோடியை வாழ்த்தினார்கள்.
சினேகாவிற்கு வரும் ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அவருடைய நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர். தங்கள் வீட்டிற்கு வரவுள்ள புதுவரை சினேகா-பிரசன்னா தம்பதிகள் வரவேற்க பெரும் ஆவலுடன் உள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.