shadow

வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் லாரியை ஏற்றி கொல்வோம். தமிழிசைக்கு வந்த கொலை மிரட்டல்

tamilisaiதமிழக சட்டமன்ற தேர்தலுக்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பிரச்சாரங்கள் சூடுபிடித்து வரும் நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் இந்த தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களம் காணுகிறது பாஜக. அதன் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தீவிரமாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

விருகம்பாக்கம் தொகுதியில் தமிழிசை செளந்திரராஜன் போட்டியிடக்கூடாது என்றும் உடனே வேட்புமனுவை திரும்ப பெற வேண்டும் என்றும் அவ்வாறு வேட்புமனுவை திரும்பப் பெறாவிட்டால், லாரி ஏற்றி கொலை செய்து விடுவதாக எஸ்.எம்.எஸ் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

தமிழிசையின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய மர்ம நபர் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் எஸ்.எம்.எஸ் அனுப்பிய நபர் பிடிபடுவார் என தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply