தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 35
கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழக அரசு மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தீவிரமாக கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே 29 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
மதுரையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த இருவருக்கும் சென்னையை சேர்ந்த இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.