அஜீத் தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்
அஜீத் நடித்த ‘வேதாளம்’ படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அஜீத் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம், விஜய்யின் 61வது படத்தையும் தயாரிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை தனது அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். ஏ.எம்.ரத்னம் அவர்கள் தீவிர சாய்பாபா பக்தர் என்பதால் நேற்று வியாழக்கிழமை இந்த படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதுகுறித்த முறையான அரிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.