shadow

அஜித்தின் அறிவுரைகளை என்னால் மறக்க முடியாது. சிவகார்த்திகேயன்
ajith
கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ திரைப்படம் கிட்டத்தட்ட அஜித், விஜய் படங்களுக்கு இணையாக வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் விண்ணை தொடும் அளவுக்கு எட்டியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நேற்று டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இதில் அஜித், விஜய், தனுஷ், சிம்பு குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இவர்கள் குறித்து சிவகார்த்திகேயன் கூறியது என்ன? என்பதை தற்போது பார்ப்போம்.

அஜித்: அஜித் ஒரு உண்மையான பண்புள்ள மனிதர் என்னை உற்சாகப்படுத்திய அவரது வார்த்தைகளையும், அறிவுரையையும் என்னால் மறக்க முடியாது.

விஜய்: விஜய் டிவி அளித்த விஜய் விருதுகள் வழங்கும் விழாவில் விஜய் சார் கையால் விருது பெற்றது எனது வாழ்க்கையில் சிறந்த தருணங்களில் ஒன்று. என்னிடம் அவர் பேசிய வார்த்தைகள் எனக்கு உற்சாகம் அளிப்பதாக அமைந்தன. மறக்க முடியாத இந்த வாய்ப்பை உருவாக்கி தந்தவர்களுக்கு நன்றி.

தனுஷ்: நடிப்பில் தனுஷ் ஒரு திறமையான மனிதர். தற்போது ஹாலிவுட் செல்லும் அவர், அங்கும் அதை நிரூபிப்பார்’

சிம்பு: சிம்பு திறமையானவர்

இவ்வாறு அஜித், விஜய், தனுஷ், சிம்பு குறித்து சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.sivakarthi action-hero-Sivakarthikeyan sivakarthikeyan tamil-movies-sivakarthikeyan-press-meet-stills39 sivakarthikeyan ajith and sivakarthikeyan

 

Leave a Reply