சிவகார்த்திகேயனின் அடுத்த படம் வேற்றுகிரக மனிதர்களின் கதையா?
சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டன
இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அவருடைய அடுத்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங் நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் படத்திற்கு முதல்முறைஆக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படம் வேற்றுகிரகத்தினர் குறித்த கதையம்சம் கொண்ட படம் என்றும் வேற்றுகிரகத்தினர் பூமிக்கு வந்ததால் ஏற்படும் ஆபத்தை சிவகார்த்திகேயன் குழுவினர் தடுப்பது எப்படி என்பதுதான் கதை என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.