திருவனந்தபுரத்தில் உள்ள நடிகை இனியாவின் வீட்டில் திருடியவன் இனியாவின் சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என்பது தெரியவந்துள்ளது. இதனால் இனியா குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இனியாவின் சொந்த ஊர் திருவனந்தபுரம் அருகே உள்ள மருதூர்க்க கடவு என்ற சிற்றூர் ஆகும். கடந்த வாரம் இனியாவின் வீட்டில் யாரும் இல்லாத போது மர்ம நபர்கள் சிலர் அவருடைய வீட்டில் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து விசாரணை செய்து வந்த போலீஸார், சில திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்துள்ளனர்.
இனியாவின் சகோதரியும், தொலைக்காட்சி நடிகையுமான ஸ்வாதி, ஷாபின் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் ஸ்வாதியின் பெற்றோர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்வாதி பிடிவாதமாக இருந்ததால், ஸ்வாதி விருப்பப்படி ஷாபினுக்கும் அவருக்கும் திருமண நிச்சயதார்த்ததை அவரது பெற்றோர்கள் நடத்தி வைத்தனர். இந்நிலையில் ஸ்வாதி வீட்டுக்கு அடிக்கடி வந்த ஷாபின், தனது கூட்டாளிகளின் துணையுடன் ஸ்வாதி வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
வீட்டில் உள்ள ஒரிஜினல் சாவியை திருடி, கள்ளச்சாவி ஏற்பாடு செய்து, அதன் மூலம் வீட்டில் யாரும் இல்லாதபோது ஷாபின் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்து திருடிய விவகாரம் தற்போது தெரிய வந்துள்ளது. இதன்பின்னர் போலீசார் ஷாபினையும் அவரது நண்பர் சாஜி ஆகியோர்களை கைது செய்தனர். ஷாபினிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஷாபினுக்கு ஏற்கனவே ஒரு கள்ளக்காதலி இருந்ததாகவும், அவர் ஷாபின் – ஸ்வாதி திருமணத்தை நிறுத்துவதாக மிரட்டியதால்தான் கள்ளக்காதலியின் வாயை அடைக்க நகைகள் மற்றும் பணத்தை திருடியதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.