shadow

முதல்வருக்கு சிகிச்சை அளிக்க சென்னை வரும் சிங்கப்பூர் மவுன்ட் எலிசெபெத் மருத்துவர்கள்

singapore-hospitalசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு மற்றும் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூர் மருத்துவர்கள் நாளை சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்வரின் உடல்நிலை தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதை அடுத்து அவருக்கு அடுத்ததாக சிறப்பு பிசியோதேரபி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், இதற்காக பிசியோதேரபி சிகிச்சையில் உலகப்புகழ் பெற்ற சிங்கப்பூர் மருத்துவர்களை தொடர்பு கொண்டு முதல்வருக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்று அப்பல்லோ மருத்துவர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிங்கப்பூர் மவுன்ட் எலிசெபெத் மருத்துவமனை சேர்ந்த இரு பிசியோதேரபி நிபுணர்கள் நாளை சென்னை வரவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply