shadow

simranவிஜய், அஜீத், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை சிம்ரன் திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். தொலைக்காட்சிகளில் மட்டும் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த சிம்ரன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ரீ எண்ட்ரி ஆகவுள்ளார்.

 தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகி வரும் திகில் திரைப்படமான ‘கரையோரம் என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் இந்த படத்திற்காக ஐந்து நாட்கள் கடற்கரை அருகில் உள்ள ஒரு பங்களாவில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிகிஷா பட்டேல், வசிஷ்டா சிம்ஹா, இனியா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியுந்தருவாயில் இருப்பதாகவும், விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை தவிர ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்திலும் சிம்ரன் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

Leave a Reply