‘அசராதவன்’ என்பதை நிரூபித்த சிம்பு
சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து படுதோல்வி அடைந்ததால் இனிமேல் சிம்பு அவ்வளவுதான் என்று பலர் நினைத்தனர். சிம்பு நடிப்புத்துறையை விட்டே விலக போவதாகவும், இயக்கம், இசையமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இந்த வதந்திகளை காதில் போட்டுக்கொள்ளாமல் சிம்பு தற்போது ‘சக்கை போடு போடு ராஜா’ என்ற படத்தின் இசையமைப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். மேலும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்றையும் அவர் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளாராம்
தன்னை பற்றிய விமர்சனங்கள், வதந்திகளை கண்டுகொள்ளாமல் அசராமல் அவர் காட்டி வரும் உழைப்பை திரையுலகினர் ஆச்சரித்துடன் கவனித்து வருகின்றனர். மேலும் விரைவில் ‘கெட்டவன்’ படத்தையும் சிம்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.