பல காதல் தோல்விகளை சந்தித்த சிம்புவின் லேட்டஸ் காதல் தோல்வி ஹன்சிகா. ஹன்சிகாவை பிரிந்த பின்னர் சிம்பு பயங்கர அப்செட்டில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கவலை கொண்டுள்ளனர்.
மேலும் அவர் நடித்து வரும் படங்கள் அனைத்துமே அரைகுறையாக ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க டி.ராஜேந்தர் குடுமத்தினர் முடிவு செய்தனர். காதல் செட் ஆகாததால், அவருக்கு உறவினர் தரப்பில் இருந்து பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
ஆனால் அடுத்தடுத்த சந்தித்த காதல் தோல்வியால், சிம்பு தனக்கு திருமணமே வேண்டாம் என்றும், தான் ஆன்மீகத்தில் ஈடுபட்டு சாமியாராக மாறப்போவதாகவும், நண்பர்கள் வட்டாரத்தில் கூறிவருகிறார்,. இதனால் டி.ராஜேந்தர் தம்பதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிம்புவிடம் பேசி அவர் மனதை மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.